மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2021, 10:26 AM IST
மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை title=

இவர் கைவசம் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார். காரை யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு (Car Accident) கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

ALSO READ | யாஷிகாவின் தற்போதைய நிலை என்ன; எலும்பு முறிவா, நடந்தது என்ன

இந்த கோர விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காரை அதிவேகமாக ஓட்டியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இதற்கிடையில் விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் உயிரிழந்த தனது தோழி குறித்தும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்து சிலர் அவரை திட்டி பதிவு செய்திருந்தனர். 

 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை கூறி உள்ளார். அவர் கூறியதாவது., டார்லிங் இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அதனால் தான் இதை நாம் விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நன்றாக ஓய்வெடு, உடல்நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ | பயங்கர கார் விபத்து; நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News