ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தால், அதை பாக்கியமாக கருதுவேன் -ராஜமெளலி

Last Updated : May 4, 2017, 02:05 PM IST
ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தால், அதை பாக்கியமாக கருதுவேன் -ராஜமெளலி title=

நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு கதை கிடைத்தால், அவரை வைத்து படம் இயக்குவேன் என்று பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்தைப் பாராட்டி ரஜினி டுவீட் செய்து இருந்தார். பதிலுக்கு ராஜமவுலி, ரஜினி வாழ்த்தியதை, கடவுளே வந்து வாழ்த்தியது போல் உணர்வதாக கூறி, நன்றியும் தெரிவித்து டுவீட் செய்திருந்தார். 

இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு ராஜமெளலி அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது:-

''இந்திய திரையுலகில் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஸ்டார். அவரிடம் கால் ஷீட் கிடைக்காதா என்று பலரும் காத்திருக்கின்றனர். ரஜினியை வைத்து இயக்குவதற்கு, ஒரு நல்ல கதை கிடைத்து, வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இயக்குவேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை பாக்கியமாக கருதுவேன் என இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளார்.

Trending News