சந்தியா ராகம் அப்டேட்: சிவராமனை பார்க்க வந்த மாயா.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், அடுத்து நடக்க போவது என்ன?

Sandhya Raagam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கமும் தேன்மொழியும் ரகுராம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2024, 01:39 PM IST
  • சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்.
  • டிராமா போடும் லிங்கம்.
  • யாருக்கும் தெரியாமல் வரும் மாயா, சீனு
சந்தியா ராகம் அப்டேட்:  சிவராமனை பார்க்க வந்த மாயா.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், அடுத்து நடக்க போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சந்தியா ராகம்’ சீரியல்.

சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கமும் தேன்மொழியும் ரகுராம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

டிராமா போடும் லிங்கம்

அதாவது, லிங்கம் ஆறுதல் சொல்வது போல் டிராமா போட்டு நான் போய் சிவராமனை கூட்டி வரேன் என்று கிளம்ப ரகுராம் எங்க சந்தோஷத்தில் மட்டும் பங்கெடுத்துகோங்க, இந்த விஷயத்தை நாங்களே பார்த்துக்கறோம், நீங்க தலையிடாதீங்க என்று சொல்ல பார்வதி நீங்களும் அவரை காப்பாத்த எதுவும் செய்யல, செய்ய வரவங்களையும் தடுக்கறீங்க என்று கோபப்பட்டு உடைந்து அழுகிறாள். 

ஜானகி சிவராம் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டார் என்று சொல்ல ரகுராம் அது எனக்கு நல்லாவே தெரியும், கண்டிப்பா நீதி ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார். அடுத்து ரகுராமை மரத்தில் கட்டி போட்டு வைத்திருக்க ஜானகி சாப்பாட்டுடன் காரில் வந்து இறங்குகிறாள். காவல்காரரிடம் அவர் கட்டை அவிழ்த்து விடுங்க, எங்கேயேயும் தப்பித்து போக மாட்டார் என்று சொல்லி சிவராமனுக்கு சாப்பாடு கொடுத்து ஆறுதல் சொல்லி கிளம்பி வருகிறாள். 

மேலும் படிக்க | “#நன்றி கெட்ட ரஞ்சித்” இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! என்ன விஷயம்?

யாருக்கும் தெரியாமல் வரும் மாயா, சீனு

அடுத்து சிவராமனை மீண்டும் மரத்தில் கட்டி போட மாயாவும் சீனுவும் யாருக்கும் தெரியாமல் அங்கு வர சிவராம் நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று சொல்ல மாயா என்ன நடந்ததுன்னுசொல்லுங்க , இல்லனா உங்க மேல பழி போட்ட மாதிரி அடுத்தடுத்து எல்லார் மேலயும் ஒரு பழியை போட்டு குடும்பத்தை அசிங்கப்படுத்த பார்ப்பாங்க என்று சொல்கிறாள். 

அதன்பிறகு சிவராமன் பொன்னுத்தாயினு ஒரு பொண்ணு வண்டியை நிறுத்தி புருஷனுக்கு பாம்பு கடிச்சி உயிருக்கு போராடுறானு வீட்டிற்கு கூட்டி போச்சு, உள்ளே போனதும் கதவை சாற்றி புடவையை களைத்து போட்டு சத்தம் போட எல்லாரும் தப்பா நினைச்சிட்டாங்க என்று நடந்தவற்றை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு எந்த ஊருல, எங்க நடந்தது என்ற விவரங்களை கேட்டு கொள்கின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தனுஷின் தந்தை என வழக்கு போட்ட கதிரேசன் காலமானார்... கடைசி காலத்தில் பட்டினியால் வாடிய சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News