விபத்தில் சிக்கிய பாடகி சின்மயியின் கார்..! என்ன நடந்தது..?

Chinmayi Sripada: பிரபல பாடகி சின்மயி, தன் குழந்தைகளுடன் விபத்தில் சிச்கியதாக கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 3, 2023, 01:38 PM IST
  • தமிழ் திரையுலகின் பிரபல பாடகியாக விளங்குபவர், சின்மயி.
  • இவரது கார் சமீபத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.
  • நடந்தது என்ன? இங்கே பார்ப்போம்.
விபத்தில் சிக்கிய பாடகி சின்மயியின் கார்..! என்ன நடந்தது..?  title=

தமிழ் திரையுலகின் பிரபல பாடகியாக விளங்குபவர், சின்மயி. இவர் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் தனது குழந்தைகளுடன் விபத்தில் சிக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

விபத்தில் சிக்கிய சின்மயி:

சின்மயி, நேற்று முன் தினம் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“மாலை 4 மணியள்வில் அபிராமிபுரத்தில் வந்து கொண்டிருந்த போது நன்கு குடித்து விட்டு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் எங்களது கார் மீது மோதினார். இதில், எங்கள் காரின் இடது புறம் அடிவாங்கியது. எனது குழந்தைகள் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தனர். விபத்து நடந்தவுடன் அவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்பவருடன் (Nanny)பத்திரமாக இறங்கினர். இந்த விபத்து நடந்த போது அனைவரும் உதவி புரிய ஓடி வந்தனர். ஒரு நல்ல மனிதர் அந்த ஆட்டோவை பின் தொரந்து சென்றுள்ளார். பின்பு அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து புகார் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை. அப்படியே புகார் கொடுத்தாலும் அது உபயோகமானதாக இருக்காது. என் குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்கள், அது போதும்” என்று கூறியுள்ளார். 

மேலும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கைகளை உடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஒரு பெற்றோராக எனக்கு வரும் கோபம் இது” என்று குறிப்பிட்டுள்ளார். “குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்றும் அவர் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பெண்களுக்காக குரல் கொடுக்கும் சின்மயி..

பாடகி சின்மயி, சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்துவிற்கு எதிராக எழுப்பிய ‘மீ டூ’ சர்ச்சை பெரிதாக வெடித்தது. சின்மயி பாடகியாக மட்டுமன்றி பல தமிழ் நடிகைகளுக்கு படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார். மீ டூ சர்ச்சை எழுந்தவுடன் இவரை திரையுலகம் ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பும் டப்பிங் பேசும் வாய்ப்புகளும் குறைந்து போனது. இது குறித்தும் சின்மயி பல இடங்களில் பேசியுள்ளார். 

மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!

அது மட்டுமன்றி, சின்மயி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்களுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். இவரது சமூக வலைதள பக்கமான ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் முழுவதுமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பதிவுகள்தான அதிகமாக இருக்கும். 

சின்மயியின் குடும்பம்..! 

பாடகி சின்மயி, 2014ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர், தமிழில் மாஸ்கோவின் காவரி, யு டர்ன், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சின்மயி-ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். 

சின்மயி பல ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் தெலுங்கு மொழிக்காக ஒரு பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் வெளியானதால் தானே ஷாக் ஆகி விட்டதாக அவர் ஒரு பதிவினை அப்போது வெளியிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘குஷி’ படத்தில் சமந்தாவிற்கு இவர் தமிழில் டப்பிங் பேசியிருந்தார். 

மேலும் படிக்க | பிரபல நடிகரின் கார் மோதி பெண் பலி..! போலீஸார் கைது செய்து விசாரணை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News