மாரி செல்வராஜ் படத்தில் தனுஷ் உடன் முதன் முறையாக இணையும் நடிகர்!

தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கப்போகும் புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்கவைக்க இயக்குனர் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2023, 05:09 PM IST
  • 'படிக்காதவன்' படத்தில் விவேக்குக்கு பதிலாக முதலில் வடிவேலு தான் நடிக்கவிருந்தார்.
  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் மற்றும் வாழை படங்கள் வெளியாகவுள்ளது.
  • தனுஷ் மீண்டும் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவிருக்கிறார்.
மாரி செல்வராஜ் படத்தில் தனுஷ் உடன் முதன் முறையாக இணையும் நடிகர்! title=

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.  தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில், கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான கர்ணன் எனும் சமூக அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.  இப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.  மீண்டும் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கும் சமயத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸை மீண்டும் தொடங்குவதாகவும்,  அந்த நிறுவனத்தின் மூலம் எடுக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.  இயக்குனர் இந்த புதிய படத்தில் வைகை புயல் வடிவேலுவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  தற்போது நடிகர் வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடிக்கிறார்.  ஆனால் வடிவேலு இதுவரை தனுஷுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  2009-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' படத்தில் அசால்ட் ஆறுமுகம் எனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு தான் முதலில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  அதன்பின்னர் சில காரணங்களால் வடிவேலு இந்த படத்தை விட்டு விலக, அவருக்கு பதிலாக இந்த வேடத்தில் விவேக் நடித்தார்.  விவேக்கின் திரைப்பயணத்தில் அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரம் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக அமைந்தது.

'கர்ணன்' படத்தின் பணிகள் நடைபெறும் சமயத்திலேயே தனுஷ்-மாரி செல்வராஜ் இருவரும் தங்களது அடுத்த படத்திற்கான கதையை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.  இருப்பினும் இந்த புதிய படத்திற்கான பணிகள் தொடங்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.  தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' மற்றும் 'வாழை' ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.  இந்த படங்களை தொடர்ந்து அவர் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து விளையாட்டு சம்மந்தப்பட்ட கதையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.  மறுபுறம் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.  கூடிய விரைவில் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | நொடிக்கு நொடி திருப்பம்... துப்பறியும் திரில்லர் - 'அவள் பெயர் ரஜினி' டீசருக்கு வரவேற்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News