பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், மகேஷ் பாபு!

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக விஜய்யையும், அருள்மொழிவர்மனாக மகேஷ் பாபுவையும் நடிக்கவைக்க இயக்குனர் மணிரத்தினம் விரும்பியதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 10, 2022, 09:41 AM IST
  • பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர்-30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
  • ரசிகர்கள் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், மகேஷ் பாபு! title=

சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றை கூறும் வகையில் புனையப்பட்டு கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்-1'.  இதுவரை பொன்னியின் செல்வன் நாவலின் ரசிகர்கள் கற்பனையில் கண்டு ரசித்த கதாபாத்திரங்களை தற்போது கண்முன்னே காண போகிறார்கள், இந்த படம் செப்டம்பர்-30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  பல பிரபலங்களும் இந்த புதினத்தை படமாக்க முயன்று தோற்றுப்போன நிலையில் தற்போது மணிரத்தினம் இதனை சாதித்து காட்டியுள்ளார்.  இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, எட்டுத்திக்கும் பொன்னியின் செல்வன் பட வைப் தான் பரவி கொண்டிருக்கிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சோபிதா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரசிக்கும்படியாக நடந்த பல சம்பவங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.  படம் வெளியாக இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Ponniyin Selvan

மேலும் படிக்க | பாலிவுட்டில் கொடி நாட்டும் இசையமைப்பாளர் சாம் CS

அதாவது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முதலில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யையும், அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் பாபுவையும் நடிக்கவைக்க இயக்குனர் மணிரத்தினம் விரும்பினார்.  ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இரண்டு பெரிய நட்சத்திரங்களாலும் இந்த திட்டத்தில் இணையமுடியவில்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.  மேலும் கூறுகையில் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமையும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயையும் நடிக்கவைக்க தான் தாங்கள் வீரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.  'பொன்னியின் செல்வன்-1' படத்திற்கு திரைக்கதையை ஜெயமோகன், குமாரவேல் மற்றும் மணிரத்தினம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News