சாம்பியனாக துடிக்கும் ஆர்சிபி - ஏலத்தில் இந்த 5 வீரர்கள்தான் டார்கெட்!

IPL Auction 2024: வரும் டிச. 19ஆம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த 5 வீரர்களைதான் எடுக்க அதிக ஆர்வம் காட்டும். 

  • Dec 06, 2023, 19:19 PM IST

 

 

 

1 /7

IPL Auction: ஹசில்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்தது. இதனால், ஆர்சிபி ரூ.40.75 கோடியை பர்ஸில் வைத்திருந்தது.  

2 /7

ஆனால், கேம்ரூன் கிரீனை ரூ.17.50 கோடியை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து டிரேட் செய்ததால் தற்போது ரூ.23.25 கோடியைதான் வைத்துள்ளது. அந்த வகையில், இந்த ஏலத்தில் ஆர்சிபி அணி வாங்க நினைக்கும் 5 வீரர்களை இதில் காணலாம். 

3 /7

ஷாருக் கான்: மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் மட்டும்தான் பினிஷராக இருக்கிறார். ஷாருக்கானை எடுக்கும்பட்சத்தில் நல்ல பேக்அப்பாக இருக்கும்.   

4 /7

மிட்செல் ஸ்டார்க்: ஹசில்வுட்டுக்கு பதில் இவருக்கு ஆர்சிபி முயற்சி செய்யும். ஆனால், ஸ்டார்க் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளதால் ஆர்சிபி அணி வாங்குவது கடினம்.   

5 /7

டேனியல் சாம்ஸ்: இவர் ஏற்கெனவே ஆர்சிபியில் இருந்தவர். தற்போது ஹசில்வுட் இல்லை, ஸ்டார்க் கிடைக்கவில்லை என்றால் இவரை ஆர்சிபி வாங்க முயற்சிக்கும்.   

6 /7

கார்த்திக் தியாகி: ஹர்ஷல் படேல் இடத்தை ஆர்சிபி இவரை கொண்டு நிரப்ப நினைக்கலாம். டெத் ஓவர்களில் சிறப்பாக பங்களிப்பார். 

7 /7

அடில் ரஷித்: ஹசரங்காவுக்கு பதில் வெளிநாட்டு ஸ்பின்னராக இவரை எடுக்க ஆர்சிபி முயற்சிக்கும்.