Virat Kholi: கிங் என அழைக்க வேண்டாம் - விராட் அன்பான வேண்டுகோள்

விராட் கோலி ரசிகர்களிடம் விடுத்திருக்கும் வேண்டுகோளில், தன்னை கிங் என அழைக்காமல் விராட் என்றே அழைக்குமாறு கூறியுள்ளார்.

 

1 /6

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.   

2 /6

ஐபிஎல் 2024 முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.  

3 /6

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.   

4 /6

இதுதொடர்பாக பேசிய அவர், "என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது. இனிமேல் என்னை விராட் என அழைத்தால் போதும்" என்று விராட் கோலி தெரிவித்தார்.  

5 /6

விராட் கோலிக்கு ரசிகர்களிடம் பல செல்லப்பெயர்கள் உள்ளன. அதில் 'கிங் கோலி' என்பது மிகவும் பிரபலமானது. இந்தியன் பிரீமியர் லீக் 2024 க்காக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் அண்மையில் இணைந்து தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.  

6 /6

ஐபிஎல் 2024 கோப்பையை அடிப்பீர்களா என கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே பதிலளித்த விராட் கோலி முதல் போட்டி சிஎஸ்கேவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறினார்.