விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

 

1 /5

வான்கடே மைதானத்தில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே நடந்த போட்டியில் விராட் கோலியின் நடத்தைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்துள்ளது. லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

2 /5

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2024ன் 36வது போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   

3 /5

ஐபிஎல் நடத்தை விதி 2.8ன் கீழ் கோலி லெவல் 1 குற்றத்தைச் செய்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவரின் அனுமதியை ஏற்றுக்கொண்டார். நடத்தை நெறிமுறையின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது மற்றும் பிணைக்கப்படும்.  

4 /5

ஹர்ஷித் ராணாவின் ஃபுல் டாஸ் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். பின்பு நோ பாலுக்கு டிஆர்எஸ் எடுத்தார். இருப்பினும், மூன்றாவது நடுவர் அது அவுட் என கூறியதால் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  

5 /5

7 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் அடித்து இருந்த போது விராட் கோலி எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார். இந்த போட்டியில் ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.