ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ரத்து!

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்காக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 23, 2018, 10:17 AM IST
ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ரத்து! title=

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்காக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து கடந்த மார்ச் 20-ம் தேதி காலை தமிழகம் வந்தது.

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை யாத்திரைக்கு நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. பின்பு மதுரைக்கு செல்கிறது. இவ்வாறு ரத யாத்திரை வரும் 25-ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்திருந்தனர். 

இந்த ரத யாத்திரைக்கு திமு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனா். ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன. இந்நிலையில், ரதயாத்திரைக்கு தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

யாரும் போரட்டத்தில் ஈடுபடதாவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதுதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பிறப்பித்திருந்தார். மேலும் ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடயிருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ஸ்டாலின் போன்ற பலர் திடீர் என கைது செய்தனர். ஜவாஹிருல்லா, வேல் முருகன் ஆகியோர் கைது செய்தனர். 

இதையடுத்து, ராமேஸ்வரத்தில் மாற்றுப்பாதையில் சென்ற ராமராஜ்ய ரத யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீஸ் கூறிய ஈ.சி.ஆர் சாலையில் செல்லாமல் தேவிப்படினம் வழியாக செல்ல முயன்றதால் இந்த ராமராஜ்ய ரத யாத்திரையை நிறுத்தியுள்ளனர். 

சாயல்குடி, வேம்பார் வழியாக தூத்துக்குடிக்கு செல்ல ராமராஜ்ய ரதம் செல்ல காவல்துறை அறிவுறுத்தல். ராமேஸ்வரத்தில் போலீசால் நிறுத்தப்பட்ட ரத யாத்திரை மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. திட்டமிட்ட பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதால் ரதத்தை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல். பேச்சுவார்த்தையை தொடர்ந்து காவல்துறையினர் கூறிய பாதையில் ரத யாத்திரை புறப்பட்டது. 

இந்நிலையில், ராம ராஜ்ஜிய ரதம் வருகையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News