Thought Education: தலைவர்களின் மூளையை ஊடுருவ இயந்திரத்தை உருவாக்கியது சீனா

Made in China: கட்சி உறுப்பினர்களின் மனதைப் படிக்கும் செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கியது சீனா. சீனாவின் ஆளும் கட்சியின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது AI அமைப்பு உருவாக்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 06:06 PM IST
  • முகபாவனைகள் மற்றும் மூளை அலைகளை பகுப்பாய்வு செய்யும் AI
  • மூளை ஸ்கேனிங் தொழில்நுட்பம் தொழிலாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டது
  • மனித மூளையை படிக்கும் செயற்கை நுண்ணறிவு
Thought Education: தலைவர்களின் மூளையை ஊடுருவ இயந்திரத்தை உருவாக்கியது சீனா title=

லண்டன்: மனிதர்களின் மூளையை அறியும் ஒரு விந்தையான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் புதிய கண்டுபிடிப்பான இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் தொடர்பான செய்தி வெளியாகி சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

சரி, இந்த AI சாதனம் எதற்கு பயன்படும்? 

மனிதர்களின் மனதை படிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence) உருவாக்கிவிட்டதாக சீனா கூறுகிறது. இது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் மனதைப் படிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக சீனா கூறுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தங்கள் கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார் என்பதை கண்டறிய பயன்படுத்தப்படும் என்று சீனா கூறுகிறது.

மேலும் படிக்க | 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா

மனிதர்களின் மனதை அறியும் சாதனம் தேவையா?
AI அமைப்பு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்று டெய்லி மெயில் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, கட்சி உறுப்பினரின் விசுவாசத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவது என்பதே இந்த புதிய சாதனத்தின் நோக்கம். இந்த சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் தொடர்பாக முதலில் ஒரு கட்டுரையில் வெளியானது, ஆனால் பின்னர் அந்தக் கட்டுரை நீக்கப்பட்டது.

ஹெஃபி விரிவான தேசிய அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று பெய்ஜிங்கில் உள்ள டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் டிடி டாங் தெரிவித்துள்ளார்.

மனதை எப்படி படிப்பது? 
இந்தச் சாதனம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் முகபாவனைகள் மற்றும் மூளை அலைகளை ஆய்வு செய்து, அவர்கள் 'யோசனை கல்வி'(Thought Education) எந்தளவுக்கு ஏற்புடையவர்கள் என்பதை தீர்மானிக்க முடியும்.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

ஜூலை 1 அன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு அகற்றப்பட்ட ஒரு கட்டுரையில் இந்த தொழில்நுட்பம் தொடர்பாக விரிவாக விவரிக்கப்பட்டிருந்ததாக டாங் கூறுகிறார்.

 'ஒருபுறம், கட்சியின் உறுப்பினர்கள் யோசனை மற்றும் அரசியல் கல்வியை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு சாதனத்தின் உதவியுடன் தீர்மானிக்கலாம். மறுபுறம், இது சிந்தனை மற்றும் அரசியல் கல்விக்கான உண்மையான தரவுகளை வழங்கும், இதனால் அது மேம்படுத்தப்பட்டு வளப்படுத்தப்படும்’ என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆராய்ச்சியாளர்கள் கருத்து
"கியோஸ்க் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வெளிப்பாடுகளைப் பார்க்க முடியும்" என்று டாங் கூறுகிறார். மூளை அலைகளைப் படிக்கும் தொழில்நுட்பம் கியோஸ்க்களில் உள்ளதா அல்லது நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைக் கண்காணிக்க முழு அமைப்பும் எவ்வாறு உருவாக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும்  குப்பை; சீனாவின்  'Sail' குப்பைகளை அகற்றுமா

மனித மனதை படிக்கும் சோதனை சீனாவுக்கு புதிதல்ல
ஆனால், மக்களின் மூளை அலைகளைப் படிப்பது சீனாவுக்குப் புதிதல்ல என்று தோன்றுகிறது. 2018 இல், ஹாங்ஜோவில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு மூளையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.  

இது ஒரு தொழிலாளியின் உணர்ச்சிகளைப் படிக்க மூளையைப் படிக்கும் ஹெல்மெட்டுகளை உள்ளடக்கியது மற்றும் மனச்சோர்வு, பதட்டம் அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சி விசுவாசத்திற்கு "யோசனை மற்றும் அரசியல் கல்வி" அவசியம் என்று நம்புவதாக கூறப்படுகிறது. கட்சி ஏற்கனவே அதன் உறுப்பினர்களுக்காக 'Xuexi Qiangguo' அல்லது 'Study to Strengthen China' என்ற 'indoctrination app' களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News