இயக்குனரிலிருந்து பாடலாசிரியராக மாறிய விக்னேஷ் சிவன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் NGK படத்திற்காக பாடலாசிரியராக மாறியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2018, 02:44 PM IST
இயக்குனரிலிருந்து பாடலாசிரியராக மாறிய விக்னேஷ் சிவன் title=

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் NGK படத்திற்காக பாடலாசிரியராக மாறியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்...

போடா போடி, நானும் ரவுடிதான், தான சேர்ந்த கூட்டம் போற்ற படங்களில் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமான NGK படத்திற்கு பாடலாசிரியராக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார். 

இப்படத்தை படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பாடலாசிரியராக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி உள்ளதாகவும், படத்திற்காக நல்ல பாடல்களை எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். என்.ஜி.கே. தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

 

Trending News