தாகத்தால் தவித்த விஷ நாகப்பாம்பு..தண்ணீர் கொடுத்த நபர்: வீடியோ வைரல்

Viral Video: சமீபத்தில், ஒரு ஆச்சரியமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, அதில் ஒரு நபர் தனது கைகளால் ராட்சத அரச நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதை காணலாம். இதைப் பார்த்த பயனர்கள் ஆச்சரியப்பட்டனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2023, 02:18 PM IST
  • வெயில் காலத்தில் தாகம் தணிக்க தண்ணீர் மிகவும் அவசியம்.
  • தற்போது ராஜ நாகத்தின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
  • ராஜ நாகப்பாம்பு ஒன்று தரையில் படம் எடுப்பதை இந்த வீடியோவில் காணலாம்.
தாகத்தால் தவித்த விஷ நாகப்பாம்பு..தண்ணீர் கொடுத்த நபர்: வீடியோ வைரல் title=

ராஜ நாகப்பாம்பு தொடர்பான இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | இரையென நினைத்து டிரோன் கேமராவை தாவிப் பிடித்த முதலை: வைரல் வீடியோ

பொதுவாக பல வகையான பாம்புகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. விஷம் மற்றும் ஆபத்தான பாம்புகள் காரணமாக, மக்கள் பெரும்பாலும் அனைத்து வகையான பாம்புகளையும் பார்த்து அஞ்சுகின்றனர். தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் ஆபத்தான நாகப்பாம்புக்கு ஒரு நபர் தனது கைகளால் தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். வெயில் காலத்தில் தாகம் தணிக்க தண்ணீர் மிகவும் அவசியம். இது மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவை. உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமான ராஜ நாகத்திற்கு  ஒருவர் தண்ணீர் இந்த வீடியோவில் கொடுப்பதைக் காணலாம். சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவில், முதலில் அவர் நாகப்பாம்பின் தலையில் சிறிது தண்ணீரை ஊற்றினார், அதன் காரணமாக அது அமைதியாகிறது. இதற்குப் பிறகு, அவர் நாகப்பாம்பின் வாய் அருகே தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்கிறார். மிகவும் தாகமாக இருக்கும் ராஜ நாகப்பாம்பு அமைதியாக தண்ணீர் குடிக்கத் தொடங்குவதையும் வீடியோவில் காணலாம்.

பாம்புக்கு தண்ணீர் கொடுத்த நபரின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோவை @thebeautifulshorts என்கிற இனஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ரோட்ல கால் நீட்டி படுத்த யானை - பஸ்ஸை நிறுத்திய டிரைவர்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News