'அந்த இரு கண்களும் என்னையே பார்த்தன': தவறுதலாக ‘எலியை’ சாப்பிட்ட நபர்!

உணவு என நினைத்து தவறுதலாக எலியை சாப்பிட்டதினால், ஒரு மனதளவிலும், உடலலவிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயினை சேர்ந்த நபரின் அனுபவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 6, 2022, 10:52 AM IST
'அந்த இரு கண்களும் என்னையே பார்த்தன': தவறுதலாக ‘எலியை’ சாப்பிட்ட நபர்! title=

உணவு என நினைத்து தவறுதலாக எலியை சாப்பிட்டதினால், ஒரு மனதளவிலும், உடலலவிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயினை சேர்ந்த நபரின் அனுபவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும்.

பெயினில் வசிக்கும் ஒரு நபர் மளிகை கடையில் இருந்து ப்ராஸன் காய்கறிகளை கொண்டு வந்துள்ளார். அந்த காய்கறியை சாப்பிட்ட போது, மிருதுவாக ஏதோ ஒன்றை உணர்ந்து,  உணவை வாயிலிருந்து துப்பிய போது, அதில் எலி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

இன்டிபென்டன்ட் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில்,  ஒரு நபரின் உணவில் எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறித்த சமப்வம் வெளியாகியுள்ளது. நான் உனவை சாப்பிடும் போது, வித்தியாசமாக உணர்ந்ததால், சந்தேகப்பட்டு துப்பியபோது என் வாயிலிருந்து எலி வெளியில் விழுந்ததாக அந்த நபர் கூறினார். எலியின் இரண்டு கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது எனக்கு மிக மோசமான அனுபவம் என அவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். என் உணவில் எலியின் உடலில் பாதி இருந்தது. மீதமுள்ள எலியின் பாகங்கள் உறைந்த காய்கறிகளின் வேறு சில பாக்கெட்டுகளில் இருக்கலாம் என அவர் கூறுகிறார்.

ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!

எலியை சாப்பிட்டதை உணர்ந்த போது, பல முறை வாந்தி எடுத்த அந்த நபர், ‘நான் சாப்பிட்டது எலி என்று தெரிந்தவுடனே, என் மனநிலையும், உடல் நிலையும் மோசமாகிவிட்டது. அதன் பிறகு நானும் பலமுறை வாந்தி எடுத்தேன். இது என் வாழ்வில் நடந்த மிக மோசமான சம்பவம் இது எனலாம். மிகவு அருவெருப்பாக உணர்ந்தேன்’ என்றார்.

பிராஸன் வெஜிடபிள் விற்பனை செய்த நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார். உறையை வைக்கப்பட்ட காய்கறியில் எலி இருந்தது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் செய்ததாக பாதிக்கப்பட்டவர் கூறினார். எலியின் உடலின் மேல் பாகம் தன்னிடம் வந்திருந்தநிலையில், மற்ற பகுதி வேறு யாருக்காவது சென்றிருக்க வேண்டும் என்பதே என் கவலை என்கிறார். 

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த நபர் மேலும் கூறுகையில், எலி தின்ற சம்பவத்திற்கு பிறகும் எனக்கு எதுவும் சாப்பிட மனம் வரவில்லை. நான் தயிர் மட்டுமே சாப்பிடுகிறேன். இது தவிர தண்ணீர் மற்றும் இதர பானங்களை எடுத்து வருகிறேன். ஆனால் இது வரை என்னால், திரவ உணவு சாப்பிட பிடிக்கவில்லை. என் நல்ல நேரம் நான் எலியை விழுங்காமல்  இருந்தேன், இல்லையெனில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். இது எனக்கு மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கலாம்  எனக் கூறினார்.

ALSO READ | வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் மீது தலையை வைத்து படுத்த நபர் -Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News