Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பவருக்கு நிச்சயம் திருமண தடை, சுப காரிய தடை போன்றவை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். ஆனால், இதிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்கள் உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2022, 09:28 PM IST
  • ஜாதகத்தில் உள்ள சில தோஷங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும்.
  • அதில் ஒன்று கால சர்ப்ப தோஷம்.
  • ஜோதிட சாஸ்திரத்தில் இதற்கான பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள் title=

ஜாதகத்தில் பிறந்த நேரத்தில் ராகுவும் கேதுவும் ஒன்றாக அமர்ந்தால், கால சர்ப்ப தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பவருக்கு நிச்சயம் திருமண தடை ஏற்படுகிறது. திருமணம் கைகூடி வந்தாலும் அது பாதியில் நின்றுவிடும். இதனால் பெருமளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். இன்னும் சிலருக்கு காரியத்தடை, சுப காரிய தடை போன்றவையும் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல், தவிப்பார்கள்.

ஜாதகத்தில் உள்ள சில தோஷங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும். அதில் ஒன்று கால சர்ப்ப தோஷம் ஜோதிட சாஸ்திரத்தில் இதற்கான பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

சாதாரணமாக தொடங்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கூட தடைகள் ஏற்படும். புதிதாக ஒரு தொழில் துவங்க நினைத்தால் கூட, அதை முழுமையாக செய்து முடிக்க முடியாமல் தடைகள் தொடர்ந்து ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வராமல் இழுத்தடிக்கலாம்.

குலதெய்வ வழிபாடு கால சர்ப்ப தோஷம் மட்டுமல்ல வாழ்க்கையில் உள்ள அனைத்து விதமான தடைகளையும் நீக்கும். குல தெய்வ கோவிலுக்கு தேவையான காணிக்கைகளை வழங்க வேண்டும். கோவிலுக்கு தேவைப்படும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிக் கொடுப்பது, அங்கு பின்பற்றப்படும் பூஜைகளுக்கு நிதி அளிப்பது, கோவில் திருப்பணிக்கு நிதி ரீதியாகவோ அல்லது உடல் உதவியோ வழங்குவது ஆகியவை தோஷத்தை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

நாதஸ்வரத்தில் இருக்கும் ஏழு துளைகளும் ஏழு கிரகங்களை குறிக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. நாதஸ்வரத்தில் இருக்கும் வாயகன்ற முன் பகுதி ராகுவையும், வாய் வைத்து ஊதும் இடம் கேதுவையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே நவகிரகங்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள நாதஸ்வரத்தின் ஒலியை கேட்டுக் கொண்டே இருந்தால், கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் வரும் பாதிப்புகள் குறையும்.

மேலும், கால சர்ப்ப தோஷம் நீங்க அமாவாசை நாளில் நீராடுதல் மற்றும் அன்னதானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் செய்யப்படும் பரிகாரத்தினால், கால சர்ப் தோஷம் மட்டுமல்லாது பித்ரு தோஷத்திலிருந்தும் விடுபடலாம்.

அமாவாசை அன்று சிவனை வழிபடுவதால் கால சர்ப்ப தோஷம் நீங்கும். இந்த நாளில், சிவன் கோவிலில் ருத்ராபிஷேகத்துடன், சிவலிங்கத்திற்கு பால் மற்றும் கற்கண்டை அர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சிவ பகவானின் அருளால் கால் சர்ப்ப தோஷம் நீங்கும்.

அமாவாசை அன்று புனித நதியில் நீராடுவது மிகவும் பலன் தரும். நீராடியதும் வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் அல்லது நாக சிலை ஆகியவற்றை வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும். 

பின்னர் கால சர்ப்ப தோஷிலிருந்து விடுதலை பெற சிவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கால சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இது தவிர, லிகாஷ்டகம் பில்வாஷ்டகம் போன்ற சிவ தாண்டவ ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதும் பலன் தரும். இதைச் செய்வதன் மூலம் ஒருவர் கால் சர்ப் தோஷிலிருந்து விடுதலை பெறுகிறார். அதே சமயம் கால சர்ப்ப தோஷம் நீங்க ராகுவையும் வழிபடுகிறார்கள். சிவன் கோவிலில் ராகுவை வழிபடுவது நன்மை தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News