திருமண தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்; சில எளிய பரிகாரங்கள்..!

ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 1, 2022, 12:09 AM IST
  • செவ்வாய் தோஷத்தினால் உண்டான பிரச்சனை தீர பரிகாரங்கள்.
  • ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தினால் திருமண தடை.
  • செவ்வாய் தோஷம் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
திருமண தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்; சில எளிய பரிகாரங்கள்..! title=

செவ்வாய் தோஷத்தால், திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜாதகத்தின் செவ்வாயின் நிலையில் காரணமாக செவ்வாய் தோஷம் உருவாகிறது. ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் தடைகள் விலக ஜோதிடத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது

செவ்வாயின் அதிபதி முருகன், என்பதால், செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வணங்கினால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும் என கூறப்படுகிறது. கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரம் பருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பதும் நல்லது.

செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற் கொள்வதும், தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும். 

மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன!

மேலும், நீங்கள் வசிக்கும் இடத்தில் வேப்ப மரக்கன்றை நடவது நல்ல பலன் தரும். இந்த செடி மரமாகும் வரை கவனித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சற்று பெரிய செடியை நட்டு 43 நாட்கள் பராமரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தினால் உண்டான பிரச்சனை தீரும்.

ஊர் எல்லையில் கோயில் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி பூஜித்து வணங்குவதாஅல், செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து வாழ்க்கை வளம் பெறும்.

ஹனுமானை வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும். 
ஹனுமான் சாலிசாவை குறைந்தது 1008 முறை பாராயணம் செய்யவும். இது தவிர பகவான் அனுமனை தவறாமல் வழிபடுங்கள். 

இது தவிர ஏரி குளங்களைத் தூர் வாருவது, கோயில் குளங்களை சுத்தம் செய்வது, நீர் வழித்தடங்களைச் சீர் செய்வது போன்ற பூமிக்கு வளம் சேர்க்கும் செயல்களாலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது தவிர நாய்க்கு உனவளிக்கலாம். மேலும், ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, உங்களுக்கு உகந்த பிரத்யேகமான பரிகாரங்களை செய்தி, துன்பம் நீங்கி அமைதி பெறலாம்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News