ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் அவதியில் சில ராசிகள்: இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

Ezharai Nattu Sani: ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், சனிக்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் மூலம் அதற்கு நிவாரணம் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 4, 2022, 07:19 PM IST
  • தொழுநோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
  • உளுந்து தானம் செய்வது ஏழரை நாட்டு சனியின் தாக்கத்துக்கான ஒரு முக்கிய நிவாரணமாக கருதப்படுகின்றது.
  • சனி சாலிசா மந்திரத்தை குறைந்தது 11 முறை உச்சரிக்கவும்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் அவதியில் சில ராசிகள்: இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும் title=

சனி பகவான்: நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு சுப பலன்களும், தீய செயல்களைச் செய்பவர்களுக்கு அசுப பலனும் கிடைக்கின்றன. சனி பகவானை நினைத்தாலே அனைவரும் அச்சப்படுகின்றனர். ஆனால், நல்ல பலன்களை அள்ளிக்கொடுப்பதிலும் அவர் சளைத்தவர் அல்ல. 

சனி தோஷ நிவாரணம்:

சனிக்கிழமை நீதியின் கடவுளான சனி பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது. ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், சனிக்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் மூலம் அதற்கு நிவாரணம் காணலாம். இது தவிர ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கத்தில் உள்ளவர்களும் இந்த பரிகாரங்கள் மூலம் பலன் பெற முடியும். 

சனி பகவானின் அருளால், வாழ்க்கையில் அதிக வெற்றி மற்றும் முன்னேற்றத்தை பெற முடியும். அவருக்கு விருப்பமான முறையில் ஒருவர் நடந்துகொண்டால், அந்த நபருக்கு அவர் அனைத்து வித செல்வங்களையும் தந்து அரசனாக்குவார். எனினும், சனியின் கோப பார்வை ஒருவர் மீது பட்டுவிட்டால், அனைத்து செல்வங்களும் ஒரே நொடியில் அவரை விட்டு சென்றுவிடும். சனிக்கிழமைகளில் சில பரிகாரங்களை செய்து, சனி பகவானை மகிழ்ச்சி அடையச் செய்யலாம். இப்படி செய்தால், சனிபகவானின் அருளால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தை குறைக்கும் பரிகாரங்கள்! நவம்பர் 11 முதல் கட்டாயம் 

சனி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்களை இங்கே காணலாம்: 

- சனிக்கிழமையன்று, காலையில் குளித்து, சனி பகவானை முறைப்படி வணங்க வேண்டும். இந்த நாளில், நல்லெண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு பலன்களை அளிக்கும். சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து அருள் பெறுங்கள். இதற்குப் பிறகு, சனி தோஷத்திலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யுங்கள்.

- ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷத்தைப் போக்க, சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று அரச மரத்திற்கு தூய தண்ணீரை அர்ப்பணித்து வழிபடவும்.

- சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். 

- எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். 

- சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில், அரச மரத்தில் தீபம் ஏற்றி, சனி மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிக்கவும். அதன் பிறகு அரச மரத்தை சுற்றி வரவும்.

- சனிக்கிழமையன்று, அருகிலுள்ள சனி கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு நல்லெண்ணெயை சமர்பிக்கவும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மிக விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தரத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.

- ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று கருப்பு உளுந்தை தானம் செய்ய வேண்டும். கருப்பு உளுந்தை கோவிலில் உள்ள சனி பகவானின் சிலைக்கு அருகில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்யலாம். 

- சனி சாலிசா மந்திரத்தை குறைந்தது 11 முறை உச்சரிக்கவும். 

- பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்படி சனி பகவானை மனமுருகி வேண்டிக்கொள்ளவும்.

- உங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு, உளுந்தை கோவிலில் உள்ள ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். 

- உளுந்து தானம் செய்வது ஏழரை நாட்டு சனியின் தாக்கத்துக்கான ஒரு முக்கிய நிவாரணமாக கருதப்படுகின்றது. 

- தொழுநோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார். 

- தொழுநோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களின் நலனுக்காக வேலை செய்வது போன்றவை சனிபகவானின் மஹாதசை பலன்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை.

- சனிக்கிழமையன்று காகங்களுக்கு உணவளிப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, இப்படி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார்.

- சனி பகவான் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் தொந்தரவு செய்யமாட்டார் என்று நம்பப்படுகிறது. ஆகையால், இந்த சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசா சொல்வது நல்லது. 

மேலும் படிக்க | வக்ரமாகும் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு நஷ்டம், நிம்மதி தொலையும், எச்சரிக்கை தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News