குரு புஷ்ய யோகம்: அடுத்த 4 மாதங்களுக்கு ராஜ யோக பலனை பெறும் ‘சில’ ராசிகள்

வியாழம் கிரகம் வக்ர நிலையில் நிலையில் மீன ராசியில் பிரவேசிக்கும் குரு வக்ர பெயர்ச்சியின் போது, ​​குறிப்பாக சில ராசிக்காரர்கள் பெரும் பலன் அடைவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2022, 12:17 PM IST
  • உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
குரு புஷ்ய யோகம்: அடுத்த 4 மாதங்களுக்கு ராஜ யோக பலனை பெறும் ‘சில’ ராசிகள் title=

குரு வக்ர பெயர்ச்சி & குரு புஷ்ய யோகம் ஜூலை 2022: குரு புஷ்ய யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த யோகம் வேலையில் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கிறது.  குரு புஷ்ய யோகம் என்பது குருவுக்கு உகந்த வியாழக் கிழமையும் பூசம் நட்சத்திரம் சேர்ந்து சேர்ந்து உருவாகும் ஒரு நல்ல நாளில் உருவாகிறது. இந்த குரு பூசம் யோக தினம், அன்னை லட்சுமி தேவியை பூஜித்து அருளை பெறுவதற்கு மிகவும் உலந்த புனிதமான நாளக கருதப்படுகிறது. வியாழன் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பதால் அபூர்வ குரு புஷ்ய யோகம் உருவாகி வருவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

ஜூலை மாதத்திலும் பல கோள்கள் வக்ர நிலையில் இடம் மாற்றிக் கொள்ளப் போகின்றன. இதில் குரு பகவானான வியாழனும் அடங்கும். வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் ஜூலை 29 ஆம் தேதி வக்ர நிலையில் பிரவேசிக்க உள்ளது. வியாழம் கிரகம் வக்ர நிலையில் நிலையில் பிரவேசிக்கும் குரு வக்ர பெயர்ச்சியின் போது, ​​குறிப்பாக சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். 

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

வியாழன் கிரகம் சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். ஜூலை 29 அன்று, வியாழன் கிரகம் மீனத்தில்  வக்ர நிலையில் நுழைய உள்ள நிலையில், வியாழனின் இந்த நிலையில் அடுத்த நான்கு மாதங்கள் இருப்பார். வியாழன் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பதால் அபூர்வ குரு புஷ்ய யோகம் உருவாகி வரும் நிலையில், இந்த யோகத்தின் சுப பலன் வரும் நான்கு மாதங்களுக்கு சில ராசிகளில் இருக்கும். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் மற்றும் பண பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை 29 முதல் நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகின்றன. வியாழன் இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் இருக்க போகிறார். தற்சமயம் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், விரைவில் நிவாரணம் பெறலாம். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம்.வியாபாரிகள் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள்.  போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

மகரம்:

மீனத்தில் வியாழன் கிரகம் வக்ர நிலையில் நுழைவது மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், மகர ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றத்துடன் வருமான உயர்வையும் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். முழு மனதுடன் செய்யும் வேலையில் வெற்றி கிட்டும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகம் பலன் தரும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். விரும்பிய பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News