வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானது. கிரகங்களின் மாற்றம் மற்றும் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2022, 06:13 PM IST
  • 2023ம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.
  • சில ராசிக்காரர்கள் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள்.
  • யாபாரம் மற்றும் வேலையில் எதிர்பாராத சுப பலன்களை செவ்வாய் வழங்குவார்.
வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்! title=

2023 புத்தாண்டில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்: சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர நிவர்த்தியாகவும் இருக்கும். ஒரு கிரகம் பிற்போக்கு திசையில் நகரும் போது, அது வக்ர பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இதில், தனது இயக்கத்தை மாற்றிக் கொண்டு, நேர் நிலைக்கு வரும் போது, ​​அது வக்ர நிவர்த்தி என்று அழைக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், எல்லா வகையான இயங்கங்களிலும் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை காணலாம். ஆளுமைப் பண்பு, உற்சாகம், தைரியம், வலிமை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது.

புத்தாண்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், சில ராசிகள், பெரும் பண ஆதாயத்தை பெற்று ராஜ யோக பலனை ஆடைவார்கள். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அந்த நபரின் பலம் அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக இருந்தால், நிர்வாக திறன் சிறப்பாக இருக்கும். புத்தாண்டில் அதாவது 2023ம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சில ராசிக்காரர்கள் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரம் மற்றும் வேலையில் எதிர்பாராத சுப பலன்களை செவ்வாய் வழங்குவார். தொழில், வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் உறவு மேம்படும்.

மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வழியால் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். படிப்பில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

செவ்வாயின் அருளால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிலம், சொத்து, வாகனப் பேரங்களில் பெரும் லாபம் கிடைக்கும். இந்த விஷயத்தை வைத்து இவர்கள் நிறைய லாபம் சம்பாதிப்பார்கள். தொழில் வாழ்க்கையில் புதிய அடையாளத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்விப் பணிகளில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.

மீனம்

செவ்வாயின் வக்ர நிவர்த்தியின் மூலம், மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் மட்டுமே  உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவி உயர்வு இருக்கும். பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: அறிவாற்றலை அள்ளித் தரும் 'புதன் கிரகம்' வலுவாக இருக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News