சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

Saturn Transit 2023: ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையை எதிர்கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2023, 10:14 PM IST
  • சனி தேவன் மனிதர்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கிறார்.
  • சனி தனது ராசியை மாற்றியவுடன், சில ராசிகளில் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்! title=

Saturn Transit 2023: சனி தேவன் கர்மாவிற்கு ஏற்ற பலன்களை அளிப்பவர். மனிதர்களின் நன்மைக்கும் தீமைக்கும் ஏற்ப பலன்களைக் கொடுக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ராசி மாறப் போகிறார் சனிதேவர். இவர் ஜனவரி 17ம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். சனி தனது ராசியை மாற்றியவுடன், சில ராசிகளில்  ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையிலிருந்து விடுதலை கிடைக்கும். பொங்கல் முதல் சில ராசிகளின் அதிர்ஷ்டமான காலம் ஆரம்பிக்கும் எனலாம். அத்தகைய சூழ்நிலையில், எந்த ராசிக்காரர்களுக்கு  ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை இருந்து விடுதலை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

சனி பெயர்ச்சி

சனி தேவன் மனிதர்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கிறார். இதுவே சனியின் ஏழரை நாட்டு சனி மிகவும் இன்னல்களை கொடுப்பதாக கருதப்படுகிறது. சனியின் ஏழரை நாட்டு சனி ஏழரை ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் சனி திசையின் தாக்கம் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும். ஜோதிடத்தின் படி, சனியின் இயக்கம் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவானதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஜனவரி 17 அன்று நடக்கவிருக்கும் அவரது பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மீனத்திற்கு செல்லும் ராகுவினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!

ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபடும் ராசிகள்

ஜனவரி 17ம் தேதி சனிபகவான் ராசி மாறுகிறார். மகர ராசி கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி பெயர்ச்சிக்கு பிறகு தனுசு ராசிக்காரர்கள் தங்கள்  ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபடுவார்கள். சனி கும்ப ராசியில் நுழையும் போதே துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

ஏழரை நாட்டு சனியின் பிடியில் சிக்கும் ராசிகள்

மேலும், சனி கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் 2023 ஜனவரி முதல் மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். இதுதவிர மகரம், கும்ப ராசிகளிலும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசை தொடங்கும்.  இத்தகைய சூழ்நிலையில், சனியின் தோஷங்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி பகவானுக்கான பரிகாரங்களை செய்வது நல்லது. சனி பகவானுக்கு விளக்கு ஏற்றுவது, ஏழைகளுக்கு தானம் செய்வது, விலங்குகளுக்கு உணவளிப்பது ஆகிய பரிகாரங்களால் நன்மை கிடைக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News