இந்த தாவரங்கள் வாழ்க்கையில் வறுமை மற்றும் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருமாம்

Vastu Shastra: வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 3, 2023, 05:00 PM IST
  • வாழ்க்கையில் துன்பங்களும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும்.
  • வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
  • குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.
இந்த தாவரங்கள் வாழ்க்கையில் வறுமை மற்றும் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருமாம் title=

வாஸ்து சாஸ்திரத்தில் மரங்களும் செடிகளும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் பசுமையான செடிகளை நடுவது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், மரங்கள் மற்றும் தாவரங்களில் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவருகிறது. வீடு அல்லது வீட்டைச் சுற்றி நடப்படும் பசுமையான செடிகள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும், அதே சமயம் மனதுக்கு நிம்மதியைத் தருகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பச்சை தாவரங்கள் இருந்தால், நேர்மறை ஓட்டம் அதிகரிக்கிறது, இது முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வருகைக்கு உதவியாக இருக்கும், ஆனால் சில தாவரங்கள் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். இது போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டின் அமைதி குலைந்து, குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றம் நின்று விடும் என்பது ஐதீகம். அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் எதிர்மறையை அதிகரிக்கும் தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முள் செடிகள்
வீட்டைச் சுற்றி முள் செடிகளை நடுவதை தவிர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, அத்தகைய செடிகளை நடுவதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்குகிறது. இதனுடன், இத்தகைய தாவரங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கும்.

மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி -சூரியன்! சுகபோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்! 

அகாசியா மரம்
வீட்டைச் சுற்றி அக்கேசியா மரத்தை ஒருபோதும் நடக்கூடாது. இந்த செடியை நடுவதால் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரிக்கும. ஏனென்றால், அகாசியா மரத்தில் முட்கள் உள்ளன, அவை வேலையில் தடையுடன் எதிர்மறை ஆற்றலைத் தரும்.

பருத்தி செடி
வீட்டில் பருத்தி அல்லது பட்டு பருத்தி செடிகளை நடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி, வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும் வறுமையையும் கொண்டு வருகிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

கருவேல மரம்
கருவேல மரத்தை வீட்டில் அல்லது அருகில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் இது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்த மரம் இருந்தால், வீட்டில் சந்தோஷம் இருக்காது என்பதோடு தரித்திரமும் ஏற்படலாம்.

மருதாணி செடி
மருதாணி செடியில், தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடி வீட்டிற்கு அருகில்  இருந்தால், வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் செடி
பெரும்பாலும் மக்கள் தங்கள் வீட்டை அல்லது வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை மரங்களை நடுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, அவை மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. உங்கள் வீட்டிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் மரம் நடப்பட்டிருந்தால், அதை அகற்றவும், ஏனெனில் அவற்றின் இருப்பு வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசி பலன்: தை வெள்ளிக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள் எவை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News