அடேங்கப்பா! ஐபிஎல் போட்டியில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Umpires Salary For IPL 2023: கிரிக்கெட் வீரர்களை போல நடுவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல் உட்பட அனைத்து வகையான போட்டிகளுக்கும், அதற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் 2023 சீசனில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2023, 04:26 PM IST
  • கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்களும் அதிக சம்பளம்.
  • ஆட்டம் முடியும் வரை எல்லா நேரங்களிலும் நடுவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • நடுவர்கள் தங்கள் ஆடையில் விளம்பரம் செய்ய நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள்.
அடேங்கப்பா! ஐபிஎல் போட்டியில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? title=

Umpires Salary In Cricket: இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் ஐபிஎல் தான் என்றாகிவிட்டது. மாலையில் ரிமோட்டுடன் டிவி முன் பலர் அமர்ந்திருப்பார்கள். பலர் தங்கள் மொபைல் போனில் டிஜிட்டல் வழியில் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். தோனி, கோஹ்லி, ரோஹித் உட்பட கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் ரன்கள், சிக்ஸர்கள், பந்துவீச்சாளர்களின் மேஜிக் முதல் கேட்ச் வரை ஐபிஎல் மீதான மோகத்திற்கு பஞ்சமில்லை. உற்சாகம், ஆரவாரம் என கலைக்கட்டும் ஐபிஎல் திருவிழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரபல நட்சத்திர வீரர்கள் ஒன்றாகக் காணப்படுகின்றனர்.

கிரிக்கெட் அம்பயர்களுக்கு எவ்வளவு சம்பளம்:
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த இந்த அனைத்து கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் எப்பொழுதும் விவாதத்தின் மையத்தில் இருக்கும். ஐபிஎல் போட்டி தொடங்கும் முன், நடைபெறும் ஏலத்தின் மீது அனைவரின் கண்கள் இருக்கும். எந்த வீரர் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்ற ஆர்வம் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்களும் அதிக சம்பளம் பெறுகின்றனர்.

ஒரு ஆட்டத்தின் போது, ​​பீல்டர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா இல்லையா, பந்து வீச்சாளர் நோ-பால் போடுகிறாரா, மைதானத்தில் ஏதேனும் விதிகள் மீறப்படுகிறதா, இல்லையா என எல்லா நேரங்களிலும் நடுவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மைதானத்தில் போட்டி நடைபெறும் போது எல்லா நேரங்களிலும் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க: விளையாட்டு விபரீதமான சோகம்! தலைக்கேறிய கிரிக்கெட் மோகத்தால் அம்பயர் கொலை

அம்பயர்களுக்கான பிரிவு:
இதன்காரணமாக தான் கிரிக்கெட் களத்தில் நடுவர்களின் முக்கியத்துவம் கிரிக்கெட் வீரர்களை விட குறைந்தது கிடையாது. அவர்களின் பணிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு நடுவராக இருப்பதன் மூலம் அம்பயர்களும் நிறைய சம்பளம் பெறுகிறார்கள்.

ஐபிஎல் விதிகளின்படி நடுவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில நடுவர்கள் அனுபவம், வேலை திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 'எலைட்' அந்தஸ்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவை 'டெவலப்மெண்ட்' பிரிவில் இருக்கின்றன.

அதிக சம்பளம் வாங்கும் 'எலைட்' பிரிவு:
ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு 'எலைட்" பேனலில் உள்ள நடுவர்கள் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் பெறுகிறார்கள். இது தவிர, அவர்களுக்கு ஒரு போட்டியில் நடுவராக செயல்பட்டால் சுமார் ரூ.12,500 வழங்கப்படுகிறது. நடுவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் பயணச் செலவுகளும் இந்த சம்பளத்தில் அடங்கும். 

ஐபிஎல் போட்டியின் அனைத்து போட்டிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றால், ஒரு நடுவர் இந்த போட்டியின் மூலம் 40 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

கடந்த சீசனில் எலைட் பேனலில் உள்ள ஐபிஎல் நடுவர்களின் சம்பளம் ஒரு போட்டிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது. முக்கியமான போட்டிகளில் எலைட் குழு நடுவர்கள் நடுவர்களாக இருப்பார்கள்.

மேலும் படிக்க: CSK போட்டியை நிறுத்திய நாய்: துரத்த படாதுபாடுபட்ட ஊழியர்கள் - கவாஸ்கர் காட்டம்

குறைந்த சம்பளம் வாங்கும் 'டெவலப்மெண்ட்' பிரிவு
'டெவலப்மெண்ட்' பேனலில் இருக்கும் சற்று அனுபவம் குறைந்த நடுவர்கள் 'டெவலப்மெண்ட்நடுவர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அம்பையராக செயல்படுவதற்கு இவர்களுக்கு 59 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும் கூடுதல் பணமும் வழங்கப்படுவதில்லை. கடந்த சீசனில் இவர்களின் சம்பளம் ஒரு போட்டிக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆக இருந்தது. 

மேலும் படிக்க: தலைகீழாக நின்று Wide குடுத்த அம்பயர்! வைரல் வீடியோ

விளம்பரம் மூலமாகவும் அம்பயர்களுக்கு வருமானம்:
இது தவிர, ஐபிஎல்லில் நடுவர்களுக்கு வேறு சில வருமானம் உள்ளது. நடுவர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து பல விளம்பர நிறுவனங்களிடமிருந்து விளம்பரத்திற்காக பணத்தைப் பெறுகின்றனர். ஒரு உதாரணம் ஐபிஎல் 14வது சீசனை சொல்லலாம்.

ஐபிஎல் 14வது சீசனுக்கு Paytm ஸ்பான்சராக இருந்தது. சீசன் முடிவில் ஒவ்வொரு நடுவருக்கும் தலா ரூ.7 லட்சத்து 33 ஆயிரம் காசோலை அந்த அமைப்பால் வழங்கப்பட்டது. இந்த முறையும் நடுவர்களின் உடையில் Paytm பெயர் உள்ளது.

போட்டிக்கு போட்டி சம்பளம் மாறுபடும்:
ஐபிஎல்க்கு வெளியே நடைபெறும் மற்ற ஐசிசி போட்டிகளில், நடுவர்களின் சம்பளம் போட்டிக்கு போட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களது சம்பளம் டி20 அல்லது ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரே மாதிரியாக இருக்கும், அதே சமயம் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான சம்பளம் வேறுபட்டது.

மேலும் படிக்க: மீண்டும் சொதப்பிய அம்பயர்! கடுப்பாகி பேட்டை உடைத்த மேத்யூ வேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News