IPL 2020 தொடர் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை நடக்கலாம்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதிருப்தி

பிராட்காஸ்டர் (Broadcaster) ஸ்டார் இந்தியா மற்றும் உரிமையாளர்கள் தரப்பில் ‘இந்த ஐபி‌எல் 2020 தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து வெளியான தகவல்களை பார்த்தால், அது எங்களுக்கு உடன்பாடு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 20, 2020, 04:59 PM IST
IPL 2020 தொடர் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை நடக்கலாம்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதிருப்தி  title=

மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) இறுதியாக ஒரு தற்காலிக அட்டவணையைக் கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (Board of Control for Cricket in India) IPL லீக் செப்டம்பர் 26 (சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முடிவடைய வேண்டும் என்ற கால அட்டவணையை தயார் செய்துள்ளது. இதில் மொத்தம்  60 ஆட்டங்கள் இடம்பெறும். IPL 2020 தொடரை நடந்த சுமார் 44 நாட்கள் ஆகும்.

பிராட்காஸ்டர் (Broadcaster) ஸ்டார் இந்தியா மற்றும் உரிமையாளர்கள் தரப்பில் ‘இந்த ஐபி‌எல் 2020 ( IPL 2020) தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து வெளியான தகவல்களை பார்த்தால், அது எங்களுக்கு உடன்பாடு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது

இண்டஸ்ட்ரி (Industry) வட்டாரங்களின்படி, இந்த ஐபிஎல் நடத்தப்படும் காலங்களில் விளம்பரங்களை கவரும் வகையில் தீபாவளி வாரத்தை உகந்த முறையில் பயன்படுத்த ஸ்டார் விரும்புகிறார். தீபாவளி நவம்பர் 14, சனிக்கிழமையன்று வருகிறது. எனவே ஐபிஎல் அந்த வார இறுதியில் முடிவடைய வேண்டும் என்று ஸ்டார் நிறுவனம் விரும்புகிறது.

ALSO READ | தங்கள் நாட்டில் IPL போட்டிகளை நடத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் UAE!

பி.சி.சி.ஐ. (BCCI) தரப்பில், தீபாவளி தேதிகளில் IPL 2020 தொடர் நடத்துவது சாத்தியமில்லை. ஏனென்றால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் (CA) நிர்வாகத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதாவது இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 3 முதல் இந்தியா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக அணி முன்னதாகவே செல்ல வேண்டியிருக்கும். 

வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐபிஎல் நவம்பர் 8 ஆம் தேதிக்குள் முடிவடைந்தால், இந்திய அணி 10 ஆம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியும். கோவிட் சோதனைகளுக்கு உட்படுத்தலாம் மற்றும் பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிகளைத் தொடங்கலாம், இதனால் முதல் டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்க முடியும் என்றார்.

ஐபிஎல் தற்காலிகமாக செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இருப்பினும் நிவாகக்குழு தரப்பில் இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையை  (T20 World Cup) ஒத்திவைப்பதாக முறையாக அறிவித்தவுடன் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | எந்த போட்டியும் இல்லை, ஊதியமும் இல்லை: ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள்

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் (Star India) 2018 ஆம் ஆண்டில் ரூ .16,347 கோடியுடன் ஏலம் எடுத்தது மற்றும் ஐந்தாண்டு உரிமை சுழற்சியின் ஒரு பகுதியாக பிசிசிஐ அமைப்புக்கு ரூ .3,500 முதல் ரூ .4,000 கோடி வரை செலுத்துகிறது.

Trending News