‘ஒகி‘ புயல் காரணமாக உயிரிழந்த ஆன்றனி ராஜ் குடும்பத்திற்கு 20 லட்சம் : முதல்வர் உத்தரவு

‘ஒகி‘ புயல் காரணமாக உயிரிழந்த ஆன்றனி ராஜ் குடும்பத்திற்கு 20 லட்சம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : Dec 22, 2017, 04:10 PM IST
‘ஒகி‘ புயல் காரணமாக உயிரிழந்த ஆன்றனி ராஜ் குடும்பத்திற்கு 20 லட்சம் : முதல்வர் உத்தரவு title=

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணிதாசன் என்பவரின் மகன் ஆன்றனி ராஜ் என்பவர் விசைப்படகில், கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, 30.11.2017 அன்று பெய்த பெருமழை மற்றும் ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது ‘ஓக்கி’ புயல் காரணமாக உயிரிழந்த ஆன்றனி ராஜ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஆன்றனி ராஜ் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending News