சாலை விபத்தில் 8 பேர் படுகாயம்:

Last Updated : Aug 3, 2017, 01:19 PM IST
சாலை விபத்தில் 8 பேர் படுகாயம்: title=

சென்னை அண்ணாசாலையில் அரசுப் பேருந்து ஒன்று கம்பத்தில் மோதிஎதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை அண்ணாசாலையில் காலை முதலே வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. அப்போது சென்னை சென்ட்ரலை நோக்கி, மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வந்த அரசுப் பேருந்து ஒன்று சென்னை ஸ்பென்சர் பிளாசா அருகே திடீரென தன்கட்டுப்பாட்டை இழந்தது சாலையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. 6 பெண்கள் உள்பட 8 பேர் இக்கோர விபத்தில் படுகாயமடைந்தனர். பின் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

திடிரென ஏற்பட்ட இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர்.

Trending News