நடிகர் விஜய்யை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது என்று செல்லூர் ராஜூ பேட்டி.                  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2023, 02:13 PM IST
  • திமுக எனும் கரடியிடம் தமிழகம் மாட்டிக்கொண்டுள்ளது.
  • மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு.
  • ஆட்சியின் மீது திமுகவினரை அதிருப்தியில் உள்ளனர்.
நடிகர் விஜய்யை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!  title=

R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமினை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் கே. ராஜு அவர்களும் R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல்  டிரஸ்ட்ன் நிறுவனர் ஜெயந்தி ராஜு அவர்களும் இணைந்து  துவக்கி வைத்தனர்.  இந்த இலவச பொது மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும், முதியவர்களும்  கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொண்டனர். மருத்துவ முகாமில் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு ,  R.J தமிழ்மணி டிரஸ்ட் மூலம் நடைபெறும் இந்த பொது மருத்துவ முகாமில் பலதரப்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக கண் சிகிச்சை, முடக்கு வாதம் போன்றவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்க படுவதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | ஆளுநரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது - சொன்னவர் செல்லூர் ராஜூ!

அதிமுக மாநாடு தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு வருவதாகவும் மாநாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளதாக தெரிவித்தார்.  திமுக எனும் கரடியிடம் தமிழகம் மாற்றிவிட்டதாக விமர்சித்தார். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆட்சியின் மீது திமுகவினரை அதிருப்தியில் இருப்பதாக கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியடையும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மக்கள் எதிர்பார்க்கும் அரசு மத்திய ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார்.  பாஜகவிற்கு முதன் முதலில் பல்லாக்கு தூக்கியது திமுக தான். அதேபோன்று காங்கிரஸுக்கும் பல்லாக்கு தூக்கி ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டது இந்த திமுக தான் என குற்றம் சாட்டினார்.

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்க துண்டுக்கு சமம். கூட்டணி என்பது தேர்தல்  காலத்தில் மட்டுமே. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொண்டு தமிழகத்தில் கூட்டணி அமைப்பது கொள்கை கூட்டணியா என கேள்வி எழுப்பினார். அதிமுகவில் தான் இஸ்லாமியர் ஒருவர் அவை தலைவராக உள்ளதாகவும், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பணியாற்றியதாகவும் , பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை  அமைச்சர் ஆக்கியதும்  அதிமுக தான் மேலும் இஸ்லாமியர் அப்துல் கலாமை  குடியரசுத் தலைவர் ஆக்கியதும், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த சங்மாவை குடியரசு தலைவராய் ஆக்கிய பெருமை அதிமுகவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.  அதிமுக என்பது ஒன்றுபட்டு தான் இருப்பதாகவும், தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் பற்றாக்குறைவு உள்ளதால் பேருந்து சரி வர இயக்க முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

நடிகர் விஜய் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சந்திப்பது வரவேற்கக் கூடியதாகவும் தொடர்ந்து அனைத்து நடிகர்களும் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இயற்கை பேரிடர் காலங்களில்  நடிகராக இருந்தபோதே மக்களுக்கு தொடர்ந்து பாடுபட்டதாக தெரிவித்தார்.  தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என அமைச்சர் ஐ .பெரியசாமி கூறியதற்கு அவர் எந்த மாநிலத்தில் உள்ளார் என செல்லூர் ராஜு  கேள்வி எழுப்பினர். இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வினை ஒழிப்பதாக கூறிவிட்டு   தற்போது நீட் தேர்வுக்கான பயிற்சிகளை கூட சரிவர கொடுப்பதில்லை என குற்றம் சுமத்தினார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டினால் தான் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட பங்கேற்காததற்கு உதயநிதியே காரணம், அவர் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே உள்ளார் என  விமர்சித்தார். இந்த அரசாங்கத்தில்  நிர்வாக கோளாறு தலை தூக்கி உள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.  முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த செலவில் கட்டிய பென்னிகுவிக் சிலையை இங்கிலாந்தில் அமைப்பதாக கூறிவிட்டு அதற்கான பராமரிப்பு செலவு கூட கட்டாமல் இருப்பதால் தற்போது தென் தமிழக மக்களின் தாகத்தை தீர்த்த பென்னிகுவிக் சிலை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய போதும் இந்த விடியா அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றம் சாற்றினார்.  இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கோவில் பாப்பாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சோனை, ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பாண்டி , மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளான எம் எஸ் பாண்டியன், சோலை ரவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News