முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.  

Written by - Yuvashree | Last Updated : Aug 4, 2023, 09:59 AM IST
  • எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுக கட்சியில் இருப்பவர், அன்வர் ராஜா.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
  • தற்போது மீண்டும் அதிமுக கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..!  title=

அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை காரணமாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். 

அன்வர் ராஜா:

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், அன்வர் ராஜா. இவர், 2014ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதற்கு முன்னர் தமிழக அமைச்சராக பொறுப்பில் இருந்தார். இவர், கடந்த 2021ஆம் அண்டு அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அப்போதிருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூறுகையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் உண்டக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் அன்வர் ராஜா கலழ அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க | மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

கட்சியில் இணைந்தார்..!

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோரால் நீக்கப்பட்ட அன்வர் ராஜா, மீண்டும் அதிமுகவில் இன்று இணைந்தார். இதற்காக அவர், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அன்வர் ராஜா எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளார். தொடர்ந்து ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் இவர். மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பதவியல் இருந்திருக்கிறார். இவர் சசிகலாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழ்நிலையில் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் இவரும் அவர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கு மாறாக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்திருப்பதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோவை: அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு..! சிக்கிய ஆவணங்கள் என்னென்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News