சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா... இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க!

New Year Celebration In Chennai: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மக்களுக்கான அறிவிப்புகள் குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 30, 2023, 06:49 PM IST
  • பைக் ரேஸ் விடுபவர்களை கண்காணிக்க ஸ்பெஷல் கேமரா
  • குடிபோதையில் போலீசாரிடம் சிக்கினால் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும்.
  • கடலில் இறங்கவும், பட்டாசு வெடிக்கவும் தடை
சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா... இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க! title=

New Year 2024 Celebration In Chennai: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான பாதுகாப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில், 2024ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க | பிரமாண்டமாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! எந்த எந்த பேருந்துகள் இங்கிருந்து செல்லும்?

420 இடங்களில் வாகன தணிக்கை குழு

மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 9 மணியில் இருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடலில் இறங்க தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (டிச. 31) மாலை முதல் ஜன.1ஆம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க | களத்தில் இறங்கிய விஜய்... மக்களை உட்காரவைத்து நிவாரணம் கொடுத்த தளபதி - நெகிழ்ந்த மக்கள்!

மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும்.

பட்டாசு வெடிக்க தடை

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். 

Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அனுமதி பெற வேண்டும்

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை பெருநகரில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் கைகோர்த்து 2024ம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

சிறப்பு வகுப்பு எடுக்கப்படும்

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகரும் இன்று செய்தியாளர்களை சந்தித்து காவல்துறை பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில்,"மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, ஆர்.கே சாலைகளில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6841 கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கேமரா ஸ்பெஷல் கேமரா ஆகும், இது தானாகவே பைக் ரேஸை அடையாளம் கண்டு, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

பைக் ரேஸ் விட்டால்...

20 இடங்களில் மது குடித்து வாகனம் ஓட்டுபவரை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மது போதையில் போலீசாரிடம் சிக்கினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இந்த குழுவால் சிறப்பு வகுப்பு எடுக்கப்படும். வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் சிறப்பு வகுப்பு எடுக்கப்படும். பாதியிலேயே வீட்டுக்கு அனுப்ப மாட்டோம். வகுப்பு காலையில் முடிந்தவுடன் வீட்டில் இருந்து ஒருவர் வந்து தான் அழைத்து செல்ல முடியும். தனியாக மதுபோதை நபரை வீட்டுக்கு அனுப்ப முடியாது" என்றார். 

தொடர்ந்து, தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பேசுகையில்,"ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் சிறப்பு லைசென்ஸ் வாங்கி கொண்டாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அவர்களுக்கும் இரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீஸ் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்" என்றார். 

மேலும் படிக்க | Video: கேப்டன்... கேப்டன்... கர்ஜனையுடன் பிரியா விடைபெற்றார் விஜயகாந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News