பாழடைந்த பங்களாவில் குற்றப்பின்னணி உள்ள இருவர் பலி! நடந்தது என்ன?

பாழடைந்த பங்களாவில் குற்றப்பின்னணி உள்ள  இருவர் மின்சாரம் தாக்கி பலி போலீசார் விசாரணை

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2021, 01:31 PM IST
பாழடைந்த பங்களாவில் குற்றப்பின்னணி உள்ள இருவர் பலி! நடந்தது என்ன? title=

குற்றச் செய்திகள்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து பெண்கள் கல்லூரி செல்லும் சாலையில் உள்ள ஒரு ஆள் இல்லாத பாழடைந்த வீட்டின் காம்பவுண்டில் இருவர் சடலம் கிடப்பதாக  அக்கம்பக்கத்தினர் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து டலை கைப்பற்றி உடல்கூறுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாழடைந்த வீட்டின் காமபவுண்டில் சடலமாக கிடந்த இருவரும் மின்கம்பத்திற்கு பக்கபலமாக உள்ள ஸ்டே கம்பியின் தாண்டி செல்லும் போது இரவில்  தெரியாமல் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

ALSO READ | நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று வன்புணர்வு செய்த Serial killer

இவர்களில் ஒருவரது பெயர் ஜான் பாஸ்கோ (வயது 40) என்றும் மற்றொருவர் பெயர் ராபர்ட் ( வயது 39) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவர்கள் திருட வந்தவர்களா அல்லது மது அருந்த வந்தவர்களா என்பது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

death of two criminals

ALSO READ | நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று வன்புணர்வு செய்த Serial killer

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News