பெற்றோர்களே அலர்ட்... ஒரே ஸ்கேனிங்கில் வங்கி அக்கவுண்டை காலி செய்யும் மோசடி கும்பல்!

Student Scholarship Scam: கல்வி உதவி தொகை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2023, 08:33 PM IST
  • இந்த கும்பல் தற்போது 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை குறிவைக்கிறது.
  • மேலும், இந்த கும்பல் டெல்லி சென்று அங்கு உள்ள மோசடி கும்பலிடம் பயிற்சி பெற்றுள்ளது.
  • கோவையில் 10க்கும் மேற்பட்டோர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
பெற்றோர்களே அலர்ட்... ஒரே ஸ்கேனிங்கில் வங்கி அக்கவுண்டை காலி செய்யும் மோசடி கும்பல்! title=

Student Scholarship Scam: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 17) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் குறித்த தகவல்களை ஒரு கும்பல் திரட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு அவர்கள் போன் செய்து அரசு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பெற்றோரின் வாட்ஸ்-அப்  எண்ணுக்கு போன் செய்த அவர்கள், இந்த கல்வி உதவித் தொகையை பெற 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கான க்யூ-ஆர் ஸ்கேன் கோட்-ஐ வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர். இதை நம்பிய பெற்றோர் அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு 2000 ரூபாய் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய ஒரு சில நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்பட்டு இருந்த மொத்த தொகையும் மர்ம நபர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் படிக்க | விஜய் கொடுத்த சிக்னல்... உதயநிதி சொன்ன பதில் - அரசியல் விளையாட்டு ஆரம்பமா?

இதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஒரே மாதிரியான புகார் வந்ததை அடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில அரசு கல்வி உதவித் தொகை தருவதாக கோரி மாணவர்களின் பெற்றோர்கள் வங்கி கணக்கில் இருந்த தொகையை முழுவதுமாக மோசடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்த நபர்கள் நாமக்கல் சௌரிபாளையம் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார்  நாமக்கல் மாவட்டம் சவுரி பாளையத்தை சேர்ந்த ஜான் ஜோசப் என்பவரின் மகன் டேவிட் (32 ), புஷ்பராஜ் என்பவரின் மகன் லாரன்ஸ் ராஜ்( 28),  ஜான் ஜோசப் என்பவரின் மகன் ஜேம்ஸ் (30), ஆரோக்கியசாமி என்பவரின் மகன் எட்வின் சகாயராஜ் (31) அங்கமுத்து என்பவரின் மகன் மாணிக்கம்( 34) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடி செயலுக்காக டெல்லி சென்று இதேபோல மோசடி செயலில் ஈடுபட்டு வரும் கும்பலிடம் சிறப்பு பயிற்சி பெற்று வந்து இந்த செயலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை 10 பேரிடம் புகார் பெற்றுள்ளதும் இவர்களது வங்கி கணக்கில் சில லட்ச ரூபாய் மட்டுமே மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த மோசடி கும்பல் 500க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. 

பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்களுக்கும் வேறு யாருக்கும்  தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அவர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 7 வங்கி பாஸ்புக்குகள், செக் புக்குகள், 7 ஏடிஎம் கார்டுகள், 22 சிம் கார்டுகள், 44 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | பைக்கில் Over Speed-ல போறீங்களா? அப்ப சிக்க போறீங்க - சென்னையை கலக்கும் interceptor vehicle!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News