இப்தார் நோன்பு: 21-ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது

Last Updated : Jun 17, 2017, 08:55 AM IST
இப்தார் நோன்பு: 21-ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது title=

சென்னை வர்த்தக மையத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூன் 21-ம் தேதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக. (அம்மா) அணி எம்.பி. அன்வர் ராஜா நிருபர்களிடம் கூறியது:-

அதிமுக (அம்மா) அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 21-ம் தேதி மாலை நடக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தான் நடைபெற்றது. அவருடைய வழியிலேயே இந்த ஆண்டும் வர்த்தக மையத்திலேயே நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News