அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு - மதுரை பாஜகவினர் செய்த சம்பவம்

மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றுகொண்டிருந்த கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 13, 2022, 02:43 PM IST
  • மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தார்
  • அவரது உடல் இன்று மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது
  • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு
அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு - மதுரை பாஜகவினர் செய்த சம்பவம் title=

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22) ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். இந்தச் சூழலில் நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர். அப்போது இரு தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு; அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. 

மேலும் படிக்க | உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி! கத்திக்குத்து தாக்குதல் வீடியோ வைரல்

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். 

PTR Palanivel Thiagarajan

நிலைமை இப்படி இருக்க லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தார்.அப்போது அங்கிருந்த பாஜகவினர், அமைச்சர் சென்ற காரின் மீது செருப்புகளை வீசி பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும் படிக்க | RSS அமைப்பின் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

மதுரை விமான நிலையத்துக்கு வந்த லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜகவினர் மரியாதை செலுத்த வேண்டுமென அமைச்சர் கூறியதால் பாஜகவினர் இச்சம்பவத்தை செய்துள்ளனர் என கூறப்படுகிறது. அமைச்சர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News