முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்: 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 12, 2022, 06:35 PM IST
  • முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்.
  • அக்டோபர் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
  • இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்: 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம் title=

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை அக்டோபர் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில்  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், மனுக்கள் மீதான விசாரணை  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதிகள், இன்றே விசாரணையை தொடங்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க | எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள் - தமிழக அரசுக்கு மத்திய இணையமைச்சர் வேண்டுகோள்

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில்  முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததை சுட்டிக்காட்டினார்.

முதலில் ரிட் வழக்கை விசாரித்துவிட்டு பிறகு குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும் எனவும், அதற்காக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நாளை ஒத்திவைப்பதாகவும், நாளை வழக்கை நடத்துங்கள் என்று  தெரிவித்தனர்.

இதையடுத்து, அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் ஒப்புதலுடன்தான் வழக்கு இன்றைக்கு தள்ளி வைப்பட்டதாகவும், தற்போது மீண்டும் தள்ளிவைக்க கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், பின் விசாரணையை அக்டோபர் 27 ம் தேதி தள்ளிவைத்தனர். அத்துடன் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News