சொத்துகுவிப்பு வழக்கை தோண்டும் நீதிமன்றம்... ஷாக்கில் திமுக அமைச்சர்கள்? - நீதிபதியின் உத்தரவு என்ன?

Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 7, 2024, 11:17 AM IST
  • 2022ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசு மீதான வழக்கு தள்ளுபடியானது.
  • 2023ஆம் ஆண்டில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மீதான வழக்கு தள்ளுபடியானது.
  • இவற்றை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க தொடங்கினார்.
சொத்துகுவிப்பு வழக்கை தோண்டும் நீதிமன்றம்... ஷாக்கில் திமுக அமைச்சர்கள்? - நீதிபதியின் உத்தரவு என்ன? title=

Tamil Nadu Latest News Updates: 2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மீதும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் ஆகியோர் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

2006-11ஆம் ஆண்டுகளில் ரூ.76.40 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மீது 2012ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் 2022ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசுவை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதேபோல், 2006-11ஆம் ஆண்டுகளில் ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது 2012ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்தது. 

மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் வராததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - மா.சுப்பிரமணியன்!

தாமாக முன்வந்து விசாரணை

லஞ்ச ஒழிப்பு துறை அளித்த மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் 2023ஆம் ஆண்டில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இரு உத்தரவுகளுக்கும் எதிராக 2023ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை தொடங்கியது. 

வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் இன்று அளித்தார். 

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கி உள்ளார். வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அமைச்சர்கள் விசாரணைக்கு வரும் செப். 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்குகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த விசாரணை அதிகாரி (Investigation Officer) அளித்த அறிக்கையும், 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்குகளை விசாரித்த அதிகாரிகள் அளித்த அறிக்கையும் வெவ்வேறாக இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News