தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் ஆவேசம்..

தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 15, 2019, 12:02 PM IST
தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் ஆவேசம்..  title=

தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ‘திமுகவுக்கு பக்கபலமாக வைகோ இருக்கிறார், அவருக்கு திமுக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ; அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாது என்பதுபோல் நாம் ஒன்றாகி உள்ளோம். வைகோ தனது உடல்நலத்தை கொஞ்சம் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்த மேடையில் வைகோவுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் ம.தி.மு.க மாநாட்டில் நான் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. நீர் அடித்து நீர்விலகாது என்பதுபோல் நாம் இருக்கிறோம். தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். அதனால்தான் ம.தி.மு.க மேடையில் ஸ்டாலினும் தி.மு.க மேடையில் வைகோவும் இருக்கிறோம் என்றார். 

மேலும், ‘தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது; ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடைபெற்று வருகிறது’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

 

Trending News