ஓபிஎஸ் சீக்கிரம் வீட்டை காலி பண்ணுங்க- நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி

Last Updated : Feb 17, 2017, 11:03 AM IST
ஓபிஎஸ் சீக்கிரம் வீட்டை காலி பண்ணுங்க- நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி title=

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளதை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த போது ஓ. பன்னீர்செல்வத்துக்கு இந்த வீடு கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல் அமைச்சராக நேற்று பதவியேற்றத்தை அடுத்து 
ஓ. பன்னீர்செல்வம் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மூலம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி தரப்படுகிறது. ஓபிஎஸ் உடனடியாக காலி செய்யாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Trending News