ஆர்.கே.நகர் இடைதேர்தல்: நடிகர் விஷால் மனு நிராகரிப்பு!!

ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று] இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

Last Updated : Dec 6, 2017, 08:23 AM IST
ஆர்.கே.நகர் இடைதேர்தல்: நடிகர் விஷால் மனு நிராகரிப்பு!! title=

ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று] இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

இந்த பரிசீலனையில் நடிகர் விஷால் தாக்கல் செய்த விருப்ப மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக ஜெ., அண்ணன் மகள் ஜெ. தீபா அவர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு  தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர்  மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கடைசி நாள் மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மொத்தம் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து. அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து  தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடந்து மாலை 5.20 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவருடைய மனுவில் முன்மொழிந்ததாக கூறப்பட்ட 10 பேரில் சுமதி, தீபன், கார்த்திக்கேயன் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், ‘மனுவில் எங்கள் பெயர் போலியாக குறிப்பிடப்பட்டு, கையெழுத்து போடப்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் மனம் உவந்து முன்மொழியவில்லை’ என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு மீண்டும் நடிகர் விஷால் சென்று, தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், விஷால் தன்னிடம் இருந்த ஆடியோ ஆதாரங்களையும், மேலும் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் அறிவித்தார்.

ஆனால் நேற்று இரவு 11 மணி அளவில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

இதன்படி மொத்தம் தாக்கல் ஆன 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

 

 

Trending News