இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தமிழ்நாட்டில் இன்று மாலை 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடக்கவிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 6, 2022, 03:04 PM IST
  • இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். பேரணி
  • மூன்று மாவட்டங்களில் நடக்கிறது
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகL தீவிரம்
இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் title=

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல் துறை மறுத்திருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு காவல் துறை இன்று அனுமதி வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல் துறை அனுமதி வழங்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேற்று அனுமதி அளித்தது. ஆனால் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் என 11 நிபந்தனைகளை விதித்தது. இதற்கிடையே இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெறுகிறது. இதற்ககு கடலூர் காவல் துறையினர் அனுமதி வழங்கினர். மேலும் பேரணி தொடங்கவிருர்ந்த இடமான திருப்பாதிரிப்புலியூர் பெரியகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள் மூலம் சோதனை நடத்தினர்.

கடலூரைத் தவிர்த்து கள்ளக்குறிச்சி, பெரம்பலூரிலும் இன்று மாலை பேரணியும், ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டமும் நடக்கவிருப்பதால் அப்பகுதிகளிலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட காவல் துறைய்னர் பலத்த பாதுகாப்பு பணிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் ரா. வன்னியராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"ஆர்எஸ்எஸ் சார்பில் கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். 

மேலும் படிக்க | பாகிஸ்தானில் அவசர நிலையா...? இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப தடை!

நாட்டின் 75ஆவது சுதத்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.

கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6,. 2022 நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று (நவ. 4) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றும் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம். வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6ஆம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News