ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2018, 12:34 PM IST
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்! title=

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. 

ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்  இதனால் அப்பகுதியில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதிக்கக்கூடாது என கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட தடை விதித்திருந்தது.

இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  தடையை நீக்கி உத்தரவிட்டனர்.  மேலும் ஜந்தர் மந்தர், இந்தியா கேட் பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும்  உத்தரவிட்டனர்.

Trending News