சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை... மனதை அதிர வைக்கும் தகவல்கள்!

சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை நடு ரோட்டில் வைத்து ஆணவ படுகொலை செய்த சம்பவம் தலைநகரையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.

Written by - Tamil Arasan | Last Updated : Feb 25, 2024, 01:50 PM IST
  • சாதி ஆணவ படுகொலை பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
  • கூட்டாளிகளை தீவிரமாகத் தேடி வந்த போலீசார்.
  • வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை.
சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை... மனதை அதிர வைக்கும் தகவல்கள்! title=

Honor Killing in Chennai Pallikaranai: சென்னை பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்றிரவு சுமார் 9 மணியளவில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து ஒருவரை  சரமாரியாக வெட்டி சென்றனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். , மருத்துவமனையில் அந்த இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்தனர். 

முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார், விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபர் பள்ளிக்கரணை அம்பேத்கார் தெருவை சேர்ந்த 26 வயதான பிரவீன் என்பது தெரிய வந்தது. 

பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம்

இவர் ஜல்லடியன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்குப் பெண்ணின் வீட்டார்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெண்ணின் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் ஷார்மியை அழைத்துச் சென்ற பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் பிரவீன் மீது ஷர்மி வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் ஷர்மியின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி உள்ளனர். 

டாஸ்மாக் கடை அருகே நடந்த படுகொலை

அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே வந்து கொண்டிருந்த பிரவீனை மடக்கி பிடித்து தினேஷும் அவரது கூட்டாளிகளும் வெட்டி படு கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | கோவை ஷாக்: குடும்பமே தற்கொலை! காரணம் என்ன?

ஆறு பேரை அதிரடி கைது செய்த போலீஸார்

இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே தாம்பரம் மாநகர காவம் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சேலையூர் உதவி சரக உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து  போலிசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை  மாம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த தினேஷ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் ஆறு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தனிப்படை போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அரங்கேறிய இந்த சாதி ஆணவ படுகொலை பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News