க்ரைம்: 'கள்ளக்காதல்' இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற இளைஞர்

Crime News in Tamil: சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர். கள்ளக்காதலியையும் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிய இளைஞர் கைது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 20, 2023, 02:51 PM IST
  • ரத்த வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டு, காயங்களுடன் மனைவி.
  • தலையில், கழுத்தில் வெட்டுக்காயம். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.
  • இரண்டு குழந்தைகளும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
க்ரைம்: 'கள்ளக்காதல்' இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற இளைஞர் title=

Tiruvallur District Crime News: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.  இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தமது மனைவி, குழந்தைகள் காணாமல் போனது கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அருகில் உள்ள குட்டுலு என்பவரது வீட்டிற்கு சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தமது மனைவி, குழந்தைகளை தேடிக்கொண்டு வந்து பார்த்தபோது குட்டுலு வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஜன்னல் வழியே வீட்டினுள் பார்த்த போது இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டும், மனைவி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் மயங்கிய நிலையில் இருந்த சுமிதா பார்  (21) என்ற இளம்பெண்ணை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தலையில் காயம், கழுத்தில் வெட்டுக்காயம் என உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: குளிக்கும் போது புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு சிறை

அவருடைய இரண்டு குழந்தைகளும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உயிரிழந்து நிலையில், சரத் (4), ரீமா (1) ஆகிய இரண்டு குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணின் கணவன் துவர்க்கா பாரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததால் துவர்க்கா பார் மற்றும் குட்டுலு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணமாகாமல் இருந்த குட்டுலுக்கு துவர்க்கா பாரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் துவாக்க பாரின் மனைவி குழந்தைகளுடன் குட்டுலு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் குட்டுலு இரண்டு குழந்தைகளையும் தலையில் தாக்கியும் வாயில் டேப்பினால் கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் தமது கள்ளக் காதலியையும் அரிவாளால் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து கள்ளக்காதலன் குட்டுலு தப்பி சென்றுள்து விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுட்டது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய பீகாரை சேர்ந்த குட்டுலு என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி  வந்த நிலையில், ஜனப்பு சத்திரம் கூட்ரோடு பகுதியில் உள்ள மேம்பாலம் மீது அவர் நடந்து சென்று கொண்டிருப்பதாக பொதுமக்கள் அடுத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: அதிர்ச்சி! 11-ம் வகுப்பு மாணவனை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 10 பேர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News