TN Governor Skips: ஆளுநர் தவிர்த்த முக்கிய வார்த்தைகள் என்னென்ன? - முழு விவரம்

Governor Skipped Dravidian Mode​l: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் சில சொற்களை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்து குறித்த முழு விவரங்களை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2023, 01:12 PM IST
  • அச்சிடப்பட்ட ஆளுநர் உரைதான் பேரைவயின் அவைக்குறிப்பில் ஏறும் என தீர்மானம் நிறைவேற்றம்.
  • இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் கொண்டுவந்தார்.
  • ஜன. 13ஆம் தேதி வரை கூட்டத்ததொடர் நடைபெற உள்ளது.
TN Governor Skips: ஆளுநர் தவிர்த்த முக்கிய வார்த்தைகள் என்னென்ன? - முழு விவரம் title=

Governor Skipped Dravidian Mode​l: ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 10 மணிக்கு உரையை தொடங்கினார். தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர், பின்னர் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட உரையை வாசித்தார். பின்னர், ஜெய் ஹிந்த் என கூறி தமிழிலேயே தனது உரையை நிறைவு செய்தார். 

தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அதனை தமிழில் வாசித்தார். இதனையடுத்து, பேரவையில் எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளை தவிர்த்தும், சில வார்த்தைகளை சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியதாக தெரிவித்து அதற்கு கண்டனம் தெரிவித்தார். 

முதல்வர் அதிரடி தீர்மானம்

தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்ட ஆளுநர் உரையில் இருப்பதே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்றும், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகையில், கொடுக்கப்பட்ட உரையில் இல்லாத  சொற்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்பட்டது. 

முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, தேசிய கீதம் ஒலிப்பது முன்னதாகவே அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | TN Assembly 2023 Live : திராவிட மாடலை தவிர்த்த ஆளுநர் - ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் தவிர்த்தது என்னென்ன?

இந்நிலையில், ஆளுநர் ரவி தனது உரையில் தவிர்த்த வார்த்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஆங்கில உரையில் 3, 7, 63, 64 ஆகிய பக்கங்களில் இடம்பெற்றிருந்த சொற்றொடர்களையும், சில வார்த்தைகளையும் தவிர்த்துவிட்டு வாசித்தார். குறிப்பாக, தமிழ்நாடு, திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர். அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். 

மேலும், 'Tamilnadu Government' என்று வரும் இடத்தில் 'This Government' என குறிப்பிட்டு பேசினார். இந்த வார்த்தைகள் எதுவும் அவை குறிப்பில் ஏறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கொடுக்கும் உரையை  அவையில் வாசிப்பதே மரபாக இருக்கும் வேளையில், ஆளுநர் மரபை மீறினாரா என கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், இதுகுறித்து அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு விளக்கமளிப்பார் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க |  நீங்க உருட்டுனது போதும்! ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டுள்ள மருத்துவ இயக்குனரகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News