டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்

Last Updated : Apr 14, 2017, 01:47 PM IST
டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம் title=

தமிழக விவசாயிகள் 32வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தவகையில் இன்று விவசாயிகள் 9 பேர் பெண்களைப் போல் சேலைகளை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

Trending News