பள்ளி மாணவரை அடித்துக் கொன்ற தாயின் கள்ளக் காதலன்

தாயுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பள்ளி மாணவரை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Sep 17, 2021, 10:10 AM IST
பள்ளி மாணவரை அடித்துக் கொன்ற தாயின் கள்ளக் காதலன் title=

செங்குன்றம்: தாயுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் பள்ளி மாணவரை அடித்து கொன்று உடலை கோயில் குளத்தில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள நெடும்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய செல்வம் என்ற காமராஜ். இவருடைய மனைவி துர்கா(30) இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 

tamilnadu

இவர்களின் மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யா(14) என்பவரை அவரது தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார்.   கடந்த 9ஆம் தேதி முதல் சூர்யா மாயமானார்.  பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது பேரனை கண்டுபிடித்து தருமாறு கோவிந்தசாமி சோழவரம் போலீசில் புகார் செய்தார்.  இந்த நிலையில் மாயமான சூர்யா நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.  இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்ற 24 வயது இளைஞர் தான் சூர்யாவை மோட்டார்சைக்கிளில் கடைசியாக அறுத்து அழைத்துச் சென்றது தெரிந்தது.  இதனையடுத்து கோபாலகிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.  அதில் செல்வத்துக்கும் அவருடைய மனைவி துர்காவுக்கும் தகராறு இருந்து வந்தது.  இதனால் துர்கா கணவருடன் கோபித்துக்கொண்டு நத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அப்போது துர்காவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபால கிருஷ்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. துர்கா உடன் கள்ளக்காதல் கோபாலகிருஷ்ணன் உல்லாசமாக இருந்ததை அவருடைய மகன் சூர்யா நேரில் பார்த்து விட்டார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் இதுபற்றி சூர்யா தன்னுடைய தந்தையிடம் கூறி விடுவான் என கருதினார்.  இதனால் 9ஆம் தேதி சூர்யாவை கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று அடித்து கொலை செய்து விட்டு அவனது உடலை கோவில் குளத்தில் வீசி தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனை கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துர்காவை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News