சிறைக் கைதிகள் செய்த சாதனை... 12ம் வகுப்பு தேர்வில் 91.43% தேர்ச்சி..!!

TN 12th Standard Public Examination Result 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித்துறை  வெளியிடப்பட்டது. இதில், புழல் சிறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகளில் 91.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2024, 01:31 PM IST
  • பொதுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.
  • எப்போதும் போலவே மாணவர்களை விட மாணவியரே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
  • சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறைக் கைதிகள் செய்த சாதனை... 12ம் வகுப்பு தேர்வில் 91.43% தேர்ச்சி..!! title=

TN 12th Standard Public Examination Result 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித்துறை  வெளியிட்டது.  பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், மொத்தம் 7,60,606 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதியிருந்தனர். அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,08,440 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3,52,165. இதில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்வு எழுதினார். 

பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் (TN 12th Standard Public Examination Result), மொத்தம் 7,19,196 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, மாணவியர் 3,93,890 பேரும் (96.44%), மாணவர்கள் 3,25,305 பேரும் (92.37%) தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றார். எப்போதும் போலவே மாணவர்களை விட மாணவியரே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயில நடவடிக்கை

பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனித்தேர்வர்களாக பொது தேர்வுகளை எழுத சிறைச்சாலைகளுக்குள் பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறைவாசிகள் தேர்வெழுதி வருகின்றனர். 

மேலும் படிக்க | TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்நிலையில், புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக 36 கைதிகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் ஒருவர் தேர்வெழுதாமல் 35 பேர் மட்டுமே தேர்வுகளை எதிர்கொண்டனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

புழல் தண்டனை சிறையில் தேர்வெழுதிய 26 ஆண் கைதிகளில் 24 பேரும், புழல் விசாரணை சிறையில் தேர்வெழுதிய 6 ஆண் கைதிகளும், புழல் மகளிர் சிறையில் தேர்வெழுதிய 3 பெண்களில் 2 பெண் கைதிகள் என 32 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக சிறையில் தேர்வெழுதியதில் 91.43% தேர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. சிறைச்சாலையில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க | மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News