டெல்லியில் விவசாயிகளை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்.

Last Updated : Mar 31, 2017, 06:15 PM IST
டெல்லியில் விவசாயிகளை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். title=

இன்று டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தந்த தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளை சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு தமிழக அரசின் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. தமிழக விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் வேளாண் காப்பீட்டுத் தொகையை தமிழக அரசு செலுத்திவிட்டது.

Trending News