இரட்டை இலையில் தினகரன் போட்டியிட முடியாது: ஓபிஎஸ்

Last Updated : Mar 15, 2017, 11:39 AM IST
இரட்டை இலையில் தினகரன் போட்டியிட முடியாது: ஓபிஎஸ் title=

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்திக்கிறார். 

இதற்காக ஓ பன்னீர் செல்வம் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி  சென்றடைந்தார். 

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம்:-

ஆர்கேநகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியமில்லை. ஆர்கேநகரில் போட்டியிடும் எங்கள் தரப்பு வேட்பாளர், ஆட்சிமன்ற குழுக் கூட்டம் கூட்டி விரைவில் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Trending News