தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - இயக்குனர் வம்சி!

வாரிசு திரைப்பட இயக்குனர் வம்சி தனது குடும்பத்தினருடனும் படக்குழுவினருடனும் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.    

Written by - RK Spark | Last Updated : Jan 29, 2023, 05:47 PM IST
  • இயக்குனர் வம்சி குடும்பத்தினருடனும் சாமி தரிசனம்.
  • இயக்குனருடன் செல்பி எடுத்து கொண்ட பக்தர்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - இயக்குனர் வம்சி! title=

தமிழ்நாட்டில் பொங்கல் தினத்தன்று பிரபல நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் வெற்றி அடைந்ததையடுத்து திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபலி இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட சன்னதியில் சாமி தரிசனம் செய்த அவர் தொடர்ந்து நவகிரக சன்னதியில் தீபமேற்றி தனது மனைவியுடனும், படக்குழுவினருடனும் சாமி தரிசனம் செய்தார்.  சாமி தரிசனம் முடித்து வந்த அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மேலும் படிக்க | பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல்

தமிழ்நாட்டு மக்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் தான் மிகுந்த கடமைப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியவர், தமிழக மக்கள் தன் மீது அளவு கடந்த அன்பிற்காகவும் தன்னை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தில் நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்தும் அண்ணாமலையாரின் ஆசியை பெறவே தான் தனது குடும்பத்தினருடனும், படக்குழுவினருடனும் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழக மக்கள் தன்மீது அன்பைப் பொழிந்துள்ளதாகவும் அதற்கு நன்றியை தெரிவித்து வணங்கியதுடன் அனைவருக்கும் தான் மிகுந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாக வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வாரிசு படத்தின் வசூல் 300 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | Mutton Biryani: திண்டுக்கல் பள்ளிவாசலில் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி விநியோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News