Mutton Biryani: திண்டுக்கல் பள்ளிவாசலில் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி விநியோகம்

Kanduri Urs Festival: திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோடு பள்ளிவாசலில் 20 ஆயிரம் பேருக்கு மெகா கைமா பிரியாணி, 3 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ கறியுடன் தயாரிக்கப்பட்டு காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

 

திண்டுக்கல் நாகல் ஜூம் ஆ பள்ளிவாசலில், முகமது நபி நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 

1 /6

தொடர்ந்து 5ம் ஆண்டாக பிரியாணி விநியோகம் தொடர்கிறது 

2 /6

பள்ளி வாசல் தலைவர் அகமது புகாரி தலைமையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு சுட சுட கைமா பிரியாணி வழங்கப்பட்டது

3 /6

திண்டுக்கல்லில் oரே நாளில் 20000 பேருக்கு இலவச மட்டன் பிரியாணி கிடைத்தது

4 /6

3 ஆயிரம் கிலோ அரிசி, 1000 கிலோ ஆட்டு கறி, 600 கிலோ கத்தரிக்காய்  கொண்டு செய்யப்பட்ட கைமா பிரியாணி

5 /6

நாகல் நகர், வேடபட்டி, ரவுண்டு ரோடு, பேகம்பூர், திருமலைசாமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பிரியாணி வாங்கிச் சென்றனர்

6 /6

பிரியாணி வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், ஜாதி மத வேறுபாடின்றி நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை மகிழ்ச்சியோடு பெற்று சென்றனர்.