ஜூலை 1 முதல் மீதமுள்ள தேர்வுகளை நாடு முழுவதும் 1500 மையங்களில் நடத்தப்போவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு (டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்திற்கு மட்டுமே) மற்றும் 12 ஆம் வகுப்பு (இந்தியா முழுவதும்) தேர்வுகளில் மீதமுள்ள தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பை CBSE வெளியிட்டது.
கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது பல்வேறு மாநிலங்களுக்கு அல்லது தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்த CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், நிலுவையில் உள்ள வாரிய தேர்வுகளுக்கு தாம் இருக்கும் தேர்வு மையத்தில் இருந்து தேர்வு எழுதலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' தெரிவித்துள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீதமுள்ள வாரியத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சனிக்கிழமை அறிவித்துள்ளார்,
கொரோனா வைரஸ் முழு அடைப்பால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12 தேர்வுகளை ஜூலை முதல் இரண்டு வாரங்களில் நடத்த வாய்ப்புள்ளது.
COVID-19 காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளதால், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்புக்கு உயர்த்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அனைத்து தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அதுக்குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்களுடன் கை சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளது. இந்த உத்தரவுடன், தற்போது நடைபெற்று வரும் சிபிஎஸ்இ வகுப்பு 10 மற்றும் 12 வாரிய தேர்வுகளுக்கான புதிய நடவடிக்கைகளையும் வாரியம் கொண்டு வந்துள்ளது.
வன்முறை பாதிப்புக்குள்ளான வடகிழக்கு டெல்லியில் புதன்கிழமை (பிப்ரவரி 26, 2020) திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25, 2020) கால அட்டவணையின்படி டெல்லியில் போர்டு தேர்வுகளை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.